பதிவு செய்த நாள்
06 அக்2020
21:48
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், மியூச்சுவல் பண்டு துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 12 சதவீதம் அதிகரித்து, 27.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு பங்குச் சந்தைகள் எழுச்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மியூச்சுவல் பண்டு துறையில் இருக்கும், 45 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சராசரிசொத்து மதிப்பு, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 24.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில், 27.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான,‘ஆம்பி’ தெரிவித்து உள்ள தாவது:கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், முதல், 10 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக ஆக்சிஸ், யு.டி.ஐ., எஸ்.பி.ஐ., கோட்டக் ஆகிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 14 முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அனைத்து நிறுவனங்களின் ஒட்டு மொத்த சராசரி வளர்ச்சி, 12 சதவீதமாக உள்ளது.எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, செப்டம்பர் காலாண்டில், 15.6 சதவீதம் அதிகரித்து, 4.21 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 8 சதவீதம் சரிந்தது. இதற்கு கடன் மற்றும் பங்குகள் பிரிவில் அதிகளவில் பணம் வெளியே எடுக்கப்பட்டது காரணமாக அமைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|