பதிவு செய்த நாள்
10 ஏப்2021
19:58
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் நுகர்வு கடந்த நிதியாண்டில், 9.1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சரிவு, 1998--–-99ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முறையாக நாட்டின் எரிபொருள் தேவை, கடந்த நிதியாண்டில் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், 214.12 மில்லியன் டன் அளவுக்கு தேவை இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில், 194.63 மில்லியன் டன் ஆக சரிவைக் கண்டுள்ளது.இந்த எரிபொருள் சரிவுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது, டீசல் தேவையில் ஏற்பட்ட சரிவாகும். கிட்டத்தட்ட, டீசல், 12 சதவீதமும் பெட்ரோல் தேவை, 6.7 சதவீதமும் சரிவு காணப்பட்டுள்ளது.
கொரோனாவால் நாடுமுழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து வணிகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. விமான நிலையங்களும் மூடப்பட்டன. இத்தகைய காரணங்களால் சரிவு ஏற்பட்டுள்ளது.சமையல் எரிவாயு மட்டும் இந்த காலகட்டத்தில், 4.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|