பதிவு செய்த நாள்
25 ஜூலை2021
19:06
இரண்டு அலைகளாக இதுவரை கொரோனா உண்டாக்கிய தாக்கம், தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. புதிய இயல்பு நிலை பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளதோடு, அவர்களில் பலர் புதிய வேலைவாய்ப்பை பெறுவதும் சிக்கலாகி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பின்னணியில், பணியில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் வேலைவாய்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதும், வளர்ச்சி வாய்ப்புகளை கண்டறிவதும் அவசியம் ஆகிறது.
முக்கிய பணி:
வேலைவாய்ப்பை தற்காத்து கொள்ள முன்கூட்டியே செயல்படுவது நல்லது. இதற்காக, ஊழியர்கள் முதலில் பணிபுரியும் நிறுவனத்தில் தங்கள் பணி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நிறுவன செயல்பாட்டிற்கு இன்றிமையாத பணி என்றால் கவலைப்பட வேண்டாம்.
ஒப்பந்த பணி:
நிறுவன நிலை காரணமாக பணியிழப்பு தவிர்க்க இயலாது எனில், மாற்று வாய்ப்புகள் என்ன என்பதை ஆராய வேண்டும். நிறுவனத்திலேயே ஒப்பந்த அடிப்படையில் அல்லது கமிஷன் அடிப்படையில் பணியில் தொடர வாய்ப்பிருக்கிறதா என கேட்கலாம். இதன் மூலம் வருமான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
ஊதியம் குறைப்பு:
நெருக்கடியான காலம் என்பதால், ஊதியம் குறைப்புக்கு உட்பட்டு பணியில் தொடர்வதை உறுதி செய்து கொள்ளலாம். தேவை எனில் நிறுவனத்திலேயே வேறு பிரிவுகளில் பணியாற்ற தயாராக இருப்பதை தெரிவித்து, பணியும், ஊதியமும் தொடர்வதை உறுதி செய்து கொள்வது நல்லது. இது உடனடி பாதிப்பை தவிர்க்கும்.
மன உறுதி:
தவிர்க்க இயலாத சூழலில் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டால், அதை தனிப்பட்ட நோக்கில் எடுத்துக் கொண்டு மனதை வருத்திக்கொள்ளக்கூடாது. ஒரு பணியிழப்பு எதிர்காலத்தை பாதித்துவிடாது என்பதையும் உணர வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் தெளிவாக இருந்தால் தான் மாற்று வாய்ப்புகளை தேட முடியும்.
உதவி கேளுங்கள்:
புதிய வேலைவாய்ப்பை தேடுவதற்கான பல்வேறு வழிகளில் ஒன்று, பணியாற்றிய நிறுவன பொறுப்பில் உள்ளவர்களிடமே பொருத்தமான வேலைக்கு சிபாரிசு செய்யுமாறு கேட்பது. நிறுவன உரிமையாளர் அல்லது மனிதவள மேலாளர் தங்கள் தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்பை பரிந்துரைக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|