பதிவு செய்த நாள்
21 செப்2021
19:35
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், வர்த்தக வாகனங்களின் விலையை, அக்டோபர் முதல் தேதியிலிருந்து உயர்த்த உள்ளது.
வாகன தயாரிப்புக்கு தேவைப்படும் பொருட்களின் விலை அதிகரித்ததை அடுத்து, வர்த்தக வாகனங்களின் விலையை, அக்டோபரிலிருந்து உயர்த்த இருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக உருக்கு, மதிப்புமிக்க உலோகங்கள் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் அதிகரித்துள்ளதால், இந்த முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வந்துள்ளது. வாகனங்கள் மாடல் மற்றும் ரகத்தைப் பொறுத்து, 2 சதவீதம் அளவிலான விலை உயர்வு இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஏற்படும் செலவுகளில், ஒரு குறிப்பிட்ட அளவை குறைப்பதன் வாயிலாக, மேலும் விலை அதிகரிக்காத வகையில் பார்த்துக் கொள்ளப்படும் என்றும், டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ‘மாருதி சுசூகி’ உள்ளிட்ட பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வால், வாகனங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|