பதிவு செய்த நாள்
18 ஜன2022
10:12
மும்பை : நடப்பாண்டில், 50 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், ‘யுனிகார்ன்’ அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மேலும், குறைந்தபட்சம் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாவது, 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிகார்ன் அந்தஸ்துஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7,400 கோடி ரூபாயை தாண்டும்பட்சத்தில், அந்நிறுவனம் யுனிகார்ன் அந்தஸ்து பெற்றதாக கருதப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து, ஆலோசனை நிறுவனமான பி.டபுள்யு.சி., இந்தியா, மேற்கொண்ட ஆய்வில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் நடப்பாண்டில், கிட்டத்தட்ட 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், யுனிகார்ன் அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டு இறுதியில் 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சம் 100 தாண்டும்.
கடந்த ஆண்டில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத ஏராளமான நிறுவனங்களின் சந்தை மதிப்பு, மிகவும் அதிகரித்தது. 43 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் உருவாகி உள்ளன.
மூன்று பகுதி முதலீடு
யுனிகார்ன் மதிப்பை எட்டிய நிறுவனங்களின் எண்ணிக்கை, ஆண்டு கடைசியில் 68 ஆக அதிகரித்தது.கடந்த அக்., – டிச., காலாண்டில் மட்டும், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 74 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பெங்களூரு மற்றும் டில்லி தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மொத்த முதலீட்டில் நான்கில் மூன்று பகுதி முதலீடுகளை ஈர்த்துள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|