பதிவு செய்த நாள்
18 ஜன2022
10:19
சென்னை : விருதுநகரில் அமைக்கப்பட உள்ள, ஒருங்கிணைந்தஆடை பூங்காவுக்கான, தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க விண்ணப்பிக்கும் தேதி ஜன., 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி அடையும் வகையில், விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில், 250 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா உருவாக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.இந்த பூங்காவை உருவாக்குவாதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில், ‘சிப்காட்’ எனும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
இதன்படி, குமாரலிங்கபுரத்தில் ஆடை பூங்கா அமைப்பதற்கான, ‘விரிவான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை’யை தயாரிக்க, ஆலோசனை நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஜனவரி 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அவகாசம் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, அறிக்கை தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விபரங்களை, www.sipcot.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|