பதிவு செய்த நாள்
23 ஜன2022
01:17
புதுடில்லி:முதல்கட்டமாக, நாட்டில் உள்ள 1,000 நகரங்களுக்கான, ‘5ஜி நெட்வொர்க் கவரேஜ்’ திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பைபர் திறனை அதிகரித்து, அனைத்து இடங்களிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.இது குறித்து, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ் கூறியதாவது:நிறுவனம், 5ஜி கவரேஜ் திட்டத்தை 1,000 நகரங்களில் நிறைவேற்றி உள்ளது. மேலும் 5ஜி இணைப்பின் வாயிலாக சுகாதாரம் மற்றும் தொழிற்சாலை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது.
அத்துடன், முப்பரிமாண வரைபடம் குறித்த சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப தேவைகள் அவசியமாக இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நாட்டின் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நடபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|