பதிவு செய்த நாள்
26 ஏப்2022
01:43
புதுடில்லி : 'அதானி' குழுமத்தின் தலைவர், கவுதம் அதானி, பங்குச் சந்தை பிதாமகன் வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி, உலகளவில், 5வது மிகப் பெரிய பணக்காரராக ஆகியுள்ளார். 'புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்' தகவலின்படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 9.52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வாரன் பபெட்டின் நிகர சொத்து மதிப்பு 9.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை, 3.31 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்து உள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட 56.2 சதவீத உயர்வாகும்.இதையடுத்து, உலகளவில் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பெர்னார்டு அர்னால்ட், பில் கேட்ஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தை, அதானி பிடித்துள்ளார்.
அண்மையில், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து அதானி குறிப்பிடும்போது, இன்னும் 10 ஆயிரம் நாட்களில் அதாவது, 2050வது ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 2,310 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|