பதிவு செய்த நாள்
26 ஏப்2022
01:43
பாமாயில் விலை உயரும்
பாமாயில் ஏற்றுமதிக்கு, இந்தோனேஷிய அரசு வரும் 28ம் தேதி முதல் தடை விதித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் பாமாயில் விலை, 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில், பாமாயில் விலையும் உயரும்பட்சத்தில், அது சாதாரண மக்களை அதிகம் பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்.ஜி., மோட்டார் முயற்சி
எம்.ஜி., மோட்டார் இந்தியா நிறுவனம், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, நாடு முழுவதும், மின்சார வாகனங்களுக்கான, ‘சார்ஜிங்’ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம், நாடு முழுக்க 7 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்க இலக்கு வைத்துள்ளது.
வெளியேறும் அன்னிய முதலீடு
நடப்பு மாதத்தில் மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து கிட்டத்தட்ட 12 ஆயிரத்து, 300 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
அமெரிக்க வட்டி விகிதம், கச்சா எண்ணெய் விலை, உக்ரைன் மீதான போர் போன்ற காரணங்களால், இம்முதலீட்டாளர்கள் முதலீடுகளிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
கச்சா எண்ணெய் இறக்குமதி
கடந்த நிதியாண்டில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, இரு மடங்கு அதிகரித்து, 9.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டான 2020 – 21ல், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, 4.79 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
‘செராமிக்’ ஏற்றுமதி அதிகரிப்பு
நாட்டின் ‘செராமிக்’ மற்றும் கண்ணாடி பொருட்களின் ஏற்றுமதி, இதுவரை இல்லாத வகையில், கடந்த நிதியாண்டில், 27 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் ‘டைல்ஸ்’ தயாரிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|