வர்த்தகம் » பொது
வர்த்தக துளிகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 மே2022
21:30
கார் வாங்கும் எண்ணம்
புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற முயற்சிகளை, வாடிக்கையாளர்கள் ஒத்தி போட்டுள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான 'கிரிசில்' தெரிவித்துள்ளது.அதேசமயம், ஆடம்பர கார் விற்பனை, அவற்றை வாங்கக்கூடிய வசதியானவர்களின் வருவாய் அதிகரித்திருப்பதை அடுத்து, உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
பின்வாங்கிய 'பேடிஎம்' நிறுவனம்
பொது காப்பீட்டு நிறுவனமான ரஹேஜா க்யூ.பி.இ., நிறுவனத்தை கையகப்படுத்தும் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டதாக, 'பேடிஎம்' நிறுவனம் அறிவித்துள்ளது.இதையடுத்து, புதிய பொது காப்பீட்டு உரிமத்துக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும், பேடிஎம்., தெரிவித்துள்ளது.
விமான எரிபொருள் விலை
உலகளவிலான எரிபொருள் விலை அதிகரிப்பால், இந்தியாவில், விமான எரிபொருளான ஏ.டி.எப்., விலை 5.3 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.நடப்பு ஆண்டில், 10 வது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு, 1 லிட்டர் 123 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இருசக்கர வாகன துறை
நாட்டின் இருசக்கர வாகன தயாரிப்பு துறை, நடப்பு நிதியாண்டில், இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டும் என, 'ஹீரோ மோட்டோ கார்ப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு நிலையை, விரைவாக எட்ட வாய்ப்பிருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
'இ - முத்ரா' பங்கு விலை'
இ - முத்ரா' நிறுவனம், 20ம் தேதி பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கும் நிலையில், அதன் பங்கின் விலை 243 - 256 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிறுவனம், 413 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. புதிய பங்கு வெளியீடு, 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 16,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 16,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!