பதிவு செய்த நாள்
17 மே2022
23:16
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ஆதாரத்தை காண்பித்தால் மட்டுமே, அந்நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சிகள் அடுத்த கட்டத்துக்கு நகரும் என, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 3.39 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில், டுவிட்டரில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலி கணக்குகள் இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், ‘டுவிட்’ செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், ‘போலி கணக்குகள் 5 சதவீதமே இருக்கும் என்பதற்கான ஆதாரத்தை காட்ட அகர்வால் மறுக்கிறார். ‘டுவிட்டர் கூறுவதை விட, 4 மடங்கு அதிகமாக, அதாவது 20 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாக தெரிகிறது. டுவிட்டர் நிறுவனம் ஆதாரத்தை காட்டும் வரையில், என்னுடைய ஒப்பந்தம் அடுத்த கட்டத்துக்கு நகராது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|