பதிவு செய்த நாள்
18 மே2022
20:59
மும்பை–-புதிதாக வங்கியை ஏற்படுத்துவதற்காக விண்ணப்பித்திருந்த 6 நிறுவனங்களின் விண்ணப்பங்களை, ரிசர்வ் வங்கி நிராகரித்துவிட்டது.
‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் தலைமையிலான ‘சைதன்யா இந்தியா பின் கிரிடிட்’ நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.கொள்கை ரீதியான அனுமதியை வழங்க ஏற்றதாக, இந்த 6 நிறுவனங்களும் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி மற்றும் சிறு நிதி வங்கி ஆகியவற்றை அமைப்பதற்காக அனுமதி கோரி, மொத்தம் 11 விண்ணப்பங்களை ரிசர்வ் வங்கி பெற்றுள்ளது.இதில், 6 நிறுவனங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது நிராகரிக்கப்பட்டு விட்டன. மீதம் இருக்கும் 5 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|