வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ...  ‘டுவிட்டர்’ ஒப்பந்தம்தடை போட்ட மஸ்க் ‘டுவிட்டர்’ ஒப்பந்தம்தடை போட்ட மஸ்க் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அடுத்தடுத்து வட்டியை உயர்த்திஅதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2022
21:44


புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடனுக்கான வட்டியை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்துள்ளது.அத்துடன், இந்த வட்டி உயர்வு 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதிர்ச்சி
கடந்த மாதம் தான் ஒரு வட்டி உயர்வை அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது தடவையாக வட்டியை உயர்த்தி, வங்கி கடன் பெற்றவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துஉள்ளது எஸ்.பி.ஐ.,இதையடுத்து, வீடு மற்றும் வாகன கடன்களை, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையில் வாங்கியவர்களின் மாதத் தவணை அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.


பணவீக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து, அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு வங்கிகள், வட்டி உயர்வை அறிவித்தன. தற்போது இரண்டாவது முறையாக வட்டி உயர்வை அறிவித்து உள்ளது

எஸ்.பி.ஐ.,இதையடுத்து, எஸ்.பி.ஐ., கடனுக்கான ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர்., வட்டி விகிதம் 7.10 சதவீதத்திலிருந்து, 7.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எதிர்பார்ப்பு
ஒரு மாதம் மற்றும் மூன்று மாத அடிப்படையிலான வட்டி 6.85 சதவீதமாகவும்; ஆறு மாத காலத்துக்கானது 7.15 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுக்கானது 7.40 சதவீதமும்; மூன்று ஆண்டுகளுக்கானது 7.50 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது.

பெரும்பாலான கடன்கள், ஓராண்டு வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும்.எஸ்.பி.ஐ., அறிவிப்பை தொடர்ந்து, விரைவில் மற்ற வங்கிகளும் வட்டி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)