பதிவு செய்த நாள்
30 ஏப்2016
06:30
புதுடில்லி : கேப்பிடல் ஸ்மால் பைனான்ஸ் நிறுவனம், 10 கிளைகளுடன், முதல் சிறு வங்கி சேவையை துவக்கி உள்ளது. ரிசர்வ் வங்கி, சிறு நிதி வங்கி சேவையில் ஈடுபட, 11 நிறுவனங்களுக்கு, 2015 செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. சிறிய வங்கி துவக்க, 100 கோடி ரூபாய் முதலீடு தேவை. பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரைச் சேர்ந்த கேப்பிடல் லோக்கல் ஏரியா பேங்க் நிறுவனம், தற்போது கேப்பிடல் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற பெயரில், சிறு நிதி வங்கி சேவையை துவக்கி உள்ளது. இந்நிறுவனம், 10 கிளைகளுடன் செயல்பட திட்டமிட்டு உள்ளது. கடந்த, 2016 மார்ச் மாதம் நிலவரப்படி, கேப்பிடல் பைனான்ஸ் வங்கியின் வணிகம், 3,000 கோடி ரூபாயாக உள்ளது. இது, 2021 மார்ச் மாதத்தில், நான்கு மடங்கு அதிகரித்து, 12 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|