பதிவு செய்த நாள்
26 ஜூன்2016
00:54
சென்னை:ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்ததை அடுத்து, அதன் தாக்கம் தோல் பொருட்கள் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.பவுண்ட் விலை ஏற்ற இறக்கம், யூரோ மீதான தாக்கம் இவை இரண்டும், தோல் பொருட்கள் ஏற்றுமதி மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் இத்துறை சார்ந்தவர்கள். இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி சந்தை, 5,854 மில்லியன் டாலர் கொண்டதாகும். தென் மாநிலங்களைவிட வட, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து தான், ஐரோப்பிய நாடுகளுக்கு தோல் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி ஆகின்றன. இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதியில் ஐரோப்பிய கூட்டமைப்பின் பங்கு, 12 சதவீதமாகும். நாணய மதிப்பு சரிந்திருப்பதால், அதை சரிக்கட்டும் வகையில் தோல் பொருட்களின் விலை அந்நாடுகளில் ஏறிவிடும். விலையேற்றத்தை ஐரோப்பிய நுகர்வோர்கள் எப்படி எதிர்கொள்வர் என்பது கேள்விக்குறிதான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|