பதிவு செய்த நாள்
26 ஜூன்2016
01:44
புதுடில்லி:கே.கே.பிர்லா குழுமம், தேயிலை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. கே.கே.பிர்லா குழுமத்தை சேர்ந்த நோபேனி குடும்பம், சர்க்கரை, தேயிலை, உணவு பதப்படுத்துதல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. உ.பி., மற்றும் பீஹார் மாநிலங்களில், சர்க்கரை தொழிலில் ஈடுபட்டு வருகிறது. அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்டம் உள்ளது. அலகாபாத்தில், உணவு பதப்படுத்தும் தொழில் உள்ளது.
கே.கே.பிர்லா குழுமத்திற்கு, சர்க்கரை தொழிலின் ஆண்டு விற்றுமுதல், 1,769 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. அதேசமயம், தேயிலை தொழிலில், 22.46 கோடி ரூபாய்; உணவு பதப்படுத்தும் தொழிலில், 38.75 கோடி ரூபாய் என உள்ளது. இதனால் சர்க்கரை தொழிலுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, தேயிலை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களை விற்பனை செய்ய, கே.கே.பிர்லா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|