‘புற­வ­ழி­யில் இறக்­கு­ம­தி­யா­கும்  உருக்கு பொருட்­களை அனு­மதிக்க மாட்­டோம்’‘புற­வ­ழி­யில் இறக்­கு­ம­தி­யா­கும் உருக்கு பொருட்­களை அனு­மதிக்க ... ... ‘ஸ்டார்ட் அப்’ நிதி சூழல் மேம்­ப­டு­கி­றது ‘ஸ்டார்ட் அப்’ நிதி சூழல் மேம்­ப­டு­கி­றது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வெற்­றிக்கு வித்­திடும் நம்­பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2017
00:12

பெண்­க­ளுக்­கான நிதி வழி­காட்­டுதல் வழி­மு­றை­களை விவ­ரித்து, ‘பிரம் வொரி டு வெல்தி’ புத்­த­கத்தை எழு­தி­யுள்ள செல்லீ கேம்பல், நிதி விஷ­யங்­களில் வெற்றி பெறு­வ­தோடு, மன அழுத்­தத்தை வென்று சம­மான வாழ்க்­கையை பெறு­வது சாத்­தியம் என்­கிறார். இதற்­கெல்லாம் அடிப்­ப­டை­யாக நம்­பிக்­கையை அவர் முன்­வைக்­கிறார்:

வெற்­றி­க­ர­மான பெண்கள் நம்­பிக்கை மிக்­க­வர்­க­ளாக இருக்­கின்­றனர். நம்­பிக்கை எந்த அளவு அதிகம் பளிச்­சி­டு­கி­றதோ, அந்த அளவு வசீ­கரம் மிக்­க­வர்­க­ளாக இருப்­ப­தாக மற்­ற­வர்கள் சொல்­வர். வசீ­கரம் அதி­க­மாக இருந்தால் வாடிக்­கை­யாளர்­களை அதிகம் கவர முடியும். ஏனெனில், தாங்கள் தனித்­தன்மை மிக்­க­வர்கள் என்றும், மற்­ற­வர்­களால் நக­லெ­டுக்க முடி­யாது என்றும் அவர்­க­ளுக்குத் தெரியும். அதிக பணம் ஈட்ட வேண்டும் எனில் இந்த அணு­கு­ முறை தான் உங்­க­ளுக்கு தேவை.

இதை ஆணவம் என சிலர் கரு­தலாம். ஆனால், இது ஆணவம் அல்ல. வெற்­றிக்­கான இந்த வழியில் இன்­னொரு முக்­கிய அம்­சமும் தேவை. பெண்கள் இதில் மிகவும் வல்­ல­வர்கள். மற்­ற­வர்கள் மீது பரிவு காட்­டு­வது தான் அது.சொந்த வர்த்­தகம் துவங்க அல்லது தொழில் வாழ்க்­கையை பெற உங்­க­ளுக்­கான வழியை உலகில் தேட முயலும் போது, முதல் தடை உள்­ளுக்குள் இருந்து எழலாம். ரிஸ்க் எடுக்க உங்கள் மீது நம்­பிக்கை வைக்க வேண்டும்.மற்­ற­வர்­க­ளுக்கு உதவி செய்­ததன் மூலம் அவர்கள் தெரி­வித்த நல்ல கருத்­துக்கள் நம்­பிக்கை அளித்­தி­ருக்கும். மற்­ற­வர்கள் உங்கள் மீது வைத்­தி­ருக்கும் நல்ல அபிப்­ராயம் மீது நீங்கள் நம்­பிக்கை வைக்க வேண்டும்.

உங்கள் திறன், தகுதி, உங்­களால் சிறப்­பாக செய்­யக்­கூ­டிய விஷ­யங்­களில் கவனம் செலுத்­துங்கள். நீங்கள் அரு­மை­யா­னவர், சிறந்­தவர், வெற்­றிக்கு தகு­தி­யா­னவர்.உங்­க­ளைப்­பற்றி நீங்கள் நல்­ல­வித­மான நம்­பிக்கை கொண்­டி­ருப்­பது, மற்­ற­வர்கள் ஆத­ரவை பெற்­றுத்­தரும். நம்­பிக்கை இருக்கும் போது, அதிகம் பொருள் ஈட்ட உங்­க­ளுக்கு நீங்­களே அனு­மதி வழங்­கலாம். இதற்கு நீங்கள் முன்­னேற்­றத்­திற்­கான தடை­களை விலக்க வேண்டும். நீங்கள் உதவ வேண்­டி­ய­வர்­க­ளுக்கு உதவி செய்து, உங்­க­ளுக்­கான வரு­மா­னத்தை அதி­க­ரித்­துக் ­கொள்ள உங்கள் திறன்­களை உச்­ச­பட்­ச­மாக பயன்­ப­டுத்­திக்­கொள்­வதை நோக்­க­மாக கொள்­ளுங்கள்.

எல்­லாரும் நம்­பிக்­கையை விரும்­பு­கின்­றனர். ஆண­வத்தை அல்ல; பதற்­றத்­தையும் அல்ல. சரி­யான அளவு நம்பிக்கை உதவும். நான் சிறப்­பாக இருக்­கிறேன், மக்கள் என்னை விரும்­பு­கின்­றனர் எனும் குரல் உங்­க­ளுக்குள் கேட்­டுக்­கொண்­டி­ருந்தால் நல்­லது. சிறந்த பயிற்சி, தயா­ரிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் நம்­பிக்கை பெற முடியும். நம்­பிக்­கையில் இருந்து வசீ­கரம் உண்­டாகும். நீங்கள் செய்­வதை விரும்பி செய்யும் போது இந்த நம்­பிக்கை உண்­டாகும். நம்­பிக்கை கொண்டு இ­ருப்­பது போன்ற உறு­தி­யுடன் செயல்­ப­டுங்கள்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)