பதிவு செய்த நாள்
18 ஜூலை2017
01:08
புதுடில்லி: இந்தாண்டு, ஜன., – ஜூன் வரை, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், எஸ்.எம்.இ., எனப்படும், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், 50 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 660 கோடி ரூபாய் திரட்டின. இது, 2016ல், இதே காலத்தில், 27 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டிய, 211 கோடி ரூபாயை விட, மூன்று மடங்கு அதிகம்; முழு ஆண்டில், 66 நிறுவனங்கள், 540 கோடி ரூபாய் திரட்டி உள்ளன.
இது குறித்து, பன்டமோத் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மகாவீர் லுனாவத் கூறியதாவது: சிறப்பான நிர்வாகம், நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீடு உயர்வு போன்றவை காரணமாக, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள், முதலீடுகளை அதிகம் ஈர்த்து வெற்றி பெற்றுள்ளன. தற்போது, நிதி நிறுவனங்கள் கூட, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் ஆர்வத்துடன் முதலீடு செய்ய துவங்கி உள்ளன. பங்குகளை வெளியிட்ட நிறுவனங்களில், பெரும்பாலானவை, முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை அளித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|