பதிவு செய்த நாள்
12 ஜன2018
00:50
மும்பை:தகவல் தொழில்நுட்பத் துறையில், முதலிடத்தில் உள்ள, டி.சி.எஸ்., நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான காலாண்டில், 3.6 சதவீதம் குறைந்து, 6,531 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 6,778 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், நிறுவனத்தின் வருவாய், 3.9 சதவீதம் உயர்ந்து, 29,735 கோடி ரூபாயில் இருந்து, 30,904 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிறுவனம், பங்கு ஒன்றுக்கு, ஏழு ரூபாய் டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்துள்ளது.
டி.சி.எஸ்., தலைமை செயல் அதிகாரி, ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:
நிறுவனம், டிச., காலாண்டில், சிறப்பான செயல்பாட்டை கண்டு உள்ளது. ‘டிஜிட்டல்’ பிரிவில், முதன்முறையாக, 5 கோடி டாலர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இப்பிரிவின் வருவாய், 40 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த வருவாயில், 22.1 சதவீத பங்கை வைத்து உள்ளது.ஒருசில பிரிவுகள், தேக்க நிலையில் இருந்து வளர்ச்சியை நோக்கி திரும்பி உள்ளன. வரும் மாதங்களில், மேலும் முன்னேற்றம் காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|