அன்னிய முதலீடு: பதஞ்சலி நிறுவனம் நிபந்தனைஅன்னிய முதலீடு: பதஞ்சலி நிறுவனம் நிபந்தனை ... மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை  ரூ.3,500 கோடி பினாமி சொத்துகள் முடக்கம் கடைகள், நகைகள், வாகனங்களும் தப்பவில்லை மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ரூ.3,500 கோடி பினாமி சொத்துகள் முடக்கம் ... ...
டிசம்பரில் சில்லரை பணவீக்கம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
00:56

புதுடில்லி:‘நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், 17 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 2017 டிசம்­ப­ரில், 5.1 சத­வீ­த­மாக அதி­க­ரித்­தி­ருக்க வாய்ப்பு உள்­ளது’ என, ‘ராய்ட்­டர்ஸ்’ நிறு­வ­னம் தெரி­வித்துள்­ளது.
இந்­நி­று­வ­னம், சில்­லரை பண­வீக்­கம் குறித்து, பொரு­ளா­தார அறி­ஞர்­கள், 40 பேர் தெரி­வித்த கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யில், வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:கடந்த ஆண்டு ஜூலை­யில், ஏழா­வது ஊதி­யக் குழு பரிந்­து­ரைப்­படி, மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்கு ஊதிய உயர்வு அறி­விக்­கப்­பட்­டது. இதை தொடர்ந்து, பல மாநி­லங்­களில், அரசு ஊழி­யர்­களின் ஊதி­ய­மும் உயர்ந்­தது.இத­னால், பணப்­பு­ழக்­கம் பெருகி, பொருட்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தது. இதன் தாக்­கத்­தால், விலை­வாசி உயர்ந்து பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ளது.
2017 டிசம்­ப­ரில், காய்­க­றி­கள் விலை ஓர­ளவு குறைந்­தி­ருந்­தது. இருந்த போதி­லும், அம்­மா­தத்­தில், பண­வீக்­கம் அதி­க­பட்ச தாக்­கத்தை கண்­டி­ருக்­கும் என, கணிக்­கப்­பட்டு உள்­ளது.ஆய்­வில் பங்­கேற்­றோர் கருத்­துப்­படி, டிசம்­ப­ரில், சில்­லரை பண­வீக்­கம், 5.1 சத­வீ­த­மாக உயர்ந்­தி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இது, 17 மாதங்­களில் இல்­லாத அதி­க­பட்ச உயர்­வா­கும். நவம்­ப­ரில், சில்­லரை பண­வீக்­கம், 15 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 4.88 சத­வீ­த­மாக உயர்ந்­தி­ருந்­தது.
கடந்த, 2016 ஜூலை­யில், சில்­லரை பண­வீக்­கம், 6.07 சத­வீ­தம் என்ற அள­வில் உச்­சத்­தில் இருந்­தது.மொத்த விலை பண­வீக்­கம், டிசம்­ப­ரில், 4 சத­வீ­த­மாக உயர்ந்­தி­ருக்­கும் என, தெரி­கிறது. இது, நவம்­ப­ரில், 3.93 சத­வீ­த­மாக இருந்­தது. 2017 அக்­டோ­ப­ரில், 2.2 சத­வீ­த­மாக இருந்த தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, நவம்­ப­ரில், 4.4 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. ரிசர்வ் வங்கி, சில்­லரை பண­வீக்க இலக்கை, 4 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­துள்­ளது.
எனி­னும், 2017 மார்ச்­சில் இருந்து ஆறு மாதங்­க­ளுக்கு, நடுத்­தர கால சில்­லரை பண­வீக்க இலக்கு, 4.3 – 4.7 சத­வீ­த­மாக இருக்­கும் என, ரிசர்வ் வங்கி கணித்­தி­ருந்­தது.இரண்­டா­வது அரை­யாண்­டி­லும், இதே நிலைப்­பாட்டை ரிசர்வ் வங்கி கொண்­டி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே, 2017 அக்., மற்­றும் டிசம்­ப­ரில் வெளி­யி­டப்­பட்ட, ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்­கை­யில், வங்­கி­க­ளுக்கு வழங்­கும், குறு­கிய கால கடன்­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்­தில் மாற்­றம் செய்­ய­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
தொடர்ந்து உய­ரும் அரசு ஊழி­யர்­க­ளுக்கு உயர்த்­தப்­பட்­டுள்ள ஊதி­யம், அல­வன்ஸ் ஆகி­ய­வற்­றின் தாக்­கம், தொடர்ந்து பண­வீக்­கத்­தில் எதி­ரொ­லித்து வரும். இது, நடப்பு, 2017 – -18ம் நிதி­யாண்­டில், மார்ச் வரை நீடிக்­கும். அத­னால், சில்­லரை பண­வீக்­கம் ஏறு­மு­கத்­தில் தான் இருக்­கும்.
மதன் சப்நவிஸ்
தலைமை பொருளாதார வல்லுனர், ‘கேர் ரேட்டிங்ஸ்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)