பதிவு செய்த நாள்
14 ஜன2018
01:19
டேட்சன் இந்தியா நிறுவனத்தின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ‘ரெடிகோ ஏ.எம்.டி.,’ காருக்கான முன்பதிவு துவங்கியது.டேட்சனின், ‘ரெடிகோ’ சிறிய ரக கார்களுக்கு, சந்தையில் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அதில், ‘ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்’ எனப்படும், ஏ.எம்.டி., கியர் உடைய, காரை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. அதை, தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அதன், முன்பதிவு துவங்கி உள்ளது. டீலர்களிடம், 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்தால், ஜன., 23 முதல், ‘டெலிவரி’ கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ‘நிசான் மோட்டார் இந்தியா’ மேலாண் இயக்குனர், ஜெரோம் செய்கோட் கூறும் போது, ‘20 மாதங்களில், டேட்சன் ரெடிகோ மாடல் காரில், நான்கு வேரியன்ட்களை அறிமுகம் செய்துள்ளோம். தற்போது, நகரவாசிகள் விரும்பும் வகையில், குறைந்த விலை, அதிக மைலேஜ் மற்றும் சிறப்பான, கிரவுன்ட் கிளியரன்சுடன், இந்த காரை அறிமுகம் செய்கிறோம்’ என்றார்.
இதில் பொருத்தப்பட்டுள்ள, ‘இன்டலிஜென்ட் ஸ்பார்க் ஆட்டோமேட்டட்’ தொழில்நுட்பமான, ஐசாட், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் இன்ஜின், அதிக மைலேஜ் தருமாம்; ரெடிகோ, ஏ.எம்.டி.,யில், ஐந்து கியர்கள் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|