பதிவு செய்த நாள்
12 மார்2018
00:46
பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பிட்ட விடுமுறை நாட்களை அனுமதித்தாலும், இந்திய ஊழியர்கள் பெரும்பாலானோர், தயக்கம் காரணமாக இந்த வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக்கொள்வது இல்லை என, தெரிய வந்துள்ளது.
‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்களுக்கு ஆண்டுக்கு, 17 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்தாலும், 30 சதவீதம் பேர் விடுமுறை கோருவதற்கான தைரியத்தை பெறுவதில்லை என தெரிய வந்துள்ளது. விடுமுறை காரணமாக வேலை பளு அதிகமாகலாம் என, 42 சதவீதம் பேர், அஞ்சுகின்றனர். 26 சதவீதம் பேர், விடுமுறை எடுக்க ஏற்ற வகையில் பொறுப்புகளை ஒப்படைக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இரு வார கால விடுமுறை
அதிருப்தியை உண்டாக்கலாம் அல்லது அனுமதி கிடைக்காமல் போகலாம் என பலரும் கருதுகின்றனர். 65 சதவீதம் பேருக்கு மேல், விடுமுறை கால சலுகையை முழுவதும் பயன்படுத்தாமல் இருக்கின்றனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|