பதிவு செய்த நாள்
27 ஏப்2018
00:45
பச்சை பட்டாணி இறக்குமதிக்கு தடை விதித்திருப்பதால், அடுத்த ஓரிரு வாரங்களில், பச்சை பட்டாணி விலை அதிரடியாக உயர உள்ளது.
சென்னை, கொத்தவால்சாவடி உணவு தானிய விற்பனை சந்தையில், நேற்று முதல், பச்சை பட்டாணி விலை கிலோவுக்கு, 5 ரூபாய் வரை உயர்ந்து, 1 கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையானது. இது குறித்து, பருப்பு தானிய வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பச்சை பட்டாணி, இந்தாண்டு இறக்குமதியாகவில்லை. உள்ளூர் உற்பத்தியும் தரமானதாக இல்லை என்பதால், இருப்பில் உள்ள பட்டாணி வகைகள், அடுத்த வாரம் முதல், கிலோவுக்கு அதிகபட்சம், 5 ரூபாய் வரை விலை உயர உள்ளது. சில்லரை விலையில் இன்னும் அதிகமாகலாம். இந்த நிலை மூன்று மாதம் வரை இருக்கும்.
பட்டாணிக்கான தேவை அதிகமாகும் போது, 1 கிலோ, 80 ரூபாய் வரை உயரலாம். தற்போது மொத்த விலையில், 1 கிலோ, 46 ரூபாயாக இருந்த பட்டாணி, 48 – 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கர்நாடகா, மஹாராஷ்டிரா பகுதிகளில் இருந்து வரும் பருப்பு வகைகள், இந்தாண்டு தேவைக்கு ஏற்ப வருவதால், விலையும் சமநிலையிலேயே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– -நமது நிருபர் –-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|