பதிவு செய்த நாள்
16 ஆக2014
00:38
ஊட்டி:நீலகிரி தேயிலை மீது, பாகிஸ்தான் வர்த்தகர்கள் பாராமுகம் காட்டுவதால், அதன் வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள், வாரந்தோறும் குன்னுார் தேயிலை ஏல மையத்தின் மூலம் விற்கப்படுகிறது. ஏலத்துக்கு வரும் தேயிலை துாளில், 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாகிஸ்தான், ரஷ்யா நாடுகள் அதிகளவு தேயிலை துாளை, கொள்முதல் செய்கின்றன.
தவிர, ஈராக், ஈரான், அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை, பாகிஸ்தான் வர்த்தகர்கள், அதிகளவு நீலகிரி தேயிலை துாளை வாங்கி வந்தனர். தற்போது அவர்களது பங்களிப்பு, குறைந்து வருகிறது.இதுகுறித்து, நீலகிரி சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:நீலகிரி தேயிலை துாளை, கொள்முதல் செய்யும் நாடுகளில், பாகிஸ்தான் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை, பாக்., வர்த்தகர்கள், ஒரு கிலோ தேயிலை துாளுக்கு அதிகபட்சம், 1.75 டாலர் (இந்திய மதிப்பில் 105 ரூபாய்) விலை கொடுத்து வாங்கினர்.
சில மாதங்களாக, கென்ய நாட்டில் இருந்து அதிகளவு தேயிலை துாளை கொள்முதல் செய்கின்றனர். கூடுதல் தரம் காரணமாக, கென்ய தேயிலை துாளுக்கு, கிலோவுக்கு, 4 டாலர் வரை (இந்திய மதிப்பில் -240 ரூபாய்) விலை கொடுக்கின்றனர். இதனால், நீலகிரி தேயிலையை குறைந்தளவு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். அதுவும், கிலோவுக்கு ஒரு டாலர் (60 ரூபாய்) மட்டுமே கொடுக்கின்றனர். இதனால், நீலகிரி தேயிலை ஏலத்தில், மந்த நிலை தொடர்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|