பதிவு செய்த நாள்
12 பிப்2014
11:28
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் நிலவும் வறட்சியால், சந்தைக்கு வாழை இலைகள், வரத்து குறைந்து வருகிறது. பிற மாவட்ட வியாபாரிகள் இங்கு முற்றுகையிடுவதால் இலைக் கட்டு நேற்று 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
வத்தலக்குண்டில் வாழை இலை மார்க்கெட் 50 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. ஆத்தூர், நிலக்கோட்டை, குள்ளப்புரம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கண்ணாபட்டி பகுதிகளில் இருந்து இலைக் கட்டுகள் விற்பனைக்கு வருகின்றன. அங்கிருந்து தினமும் சென்னை, பெங்களூரு, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளுக்கு வாழை இலை விற்பனைக்கு செல்கிறது. இப்பகுதியில் நிலவும் வறட்சியால் சந்தைக்கு இலை வரத்து குறைந்து உள்ளது. தினமும் 8 ஆயிரம் இலைக்கட்டுகள் விற்பனையாகும் சந்தையில், 3 ஆயிரத்திற்கும் குறைவான இலை கட்டுகளே விற்பனைக்கு வருகின்றன. அவற்றை வாங்குவதற்கு வெளியூர் வியாபாரிகள் வத்தலக்குண்டு சந்தையில் குவிகின்றனர். இதனால், இலைக்கு கிராக்கி ஏற்பட்டு, நேற்று 200 இலை கொண்ட ஒரு கட்டு, அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்திற்கும், குறைந்த பட்சமாக ரூ.ஆயிரத்து 500 க்கும் விற்றது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லரை விற்பனையில் ஒரு இலையின் விலை ரூ. 15 ஆக உள்ளது.
கமிஷன் கடை உரிமையாளர் தியாகராஜன் கூறுகையில், "வியாபாரிகளுக்கு இலை கட்டு கொடுக்க முடியவில்லை. தை மாதமே இப்படி என்றால், கோடை யில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என தெரியவில்லை,” என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|