பதிவு செய்த நாள்
13 ஜூலை2020
23:45
புதுடில்லி:நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கடந்த ஜூன் மாதத்தில், 34.72 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 34.72 சதவீதம் அளவுக்கு சரிந்து, 12 ஆயிரத்து, 333 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக, இத்துறைக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர் கொலின் ஷா கூறியதாவது:கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்றுமதி, 19 ஆயிரத்து, 951 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூனில், 12 ஆயிரத்து, 333 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.கொரோனா பரவல் காரணமாக, பெரும்பாலான நாடுகளில், பொருளாதார செயல்பாடுகள் குறைந்து, தேவையும் சரிந்துள்ளது. இருப்பினும் சீனா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் தேவைகள் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.
தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 79 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.அதே சமயம், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, முதல் காலாண்டில், 2,445 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலத்தில், 1,260 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|