பதிவு செய்த நாள்
09 மார்2011
12:16
புதுடில்லி: சென்ற 200910ம் நிதியாண்டில், நாட்டின் தனிநபர் வருமானம் 46 ஆயிரத்து 492 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 200809ம் நிதியாண்டில் இருந்ததை விட, 14.5 சதவீதம்(40 ஆயிரத்து 605 ரூபாய்)அதிகமாகும். தனிநபர் வருமானம் குறித்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கூறியதாவது: நாட்டின், தனிநபர் வருவாய், மதிப்பீட்டை ஒட்டியே உள்ளது. 200405ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தனிநபர் வருமானம் கணக்கிடப்படுகிறது. அவ்வாண்டில், கிராமப்புறங்களில் உள்ளோரின் தனிநபர் வருவாய் 16 ஆயிரத்து 327 ரூபாய் என்ற அளவிலும், நகரங்களில் உள்ளவர்களின் வருவாய் 44 ஆயிரத்து 223 ரூபாயாகவும் இருந்தது. நகரங்களை விட, கிராமப்புறங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், வருவாயில், அதிக வேறுபாடு காணப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ளவ ர்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் பாரத் நிர்மாண் திட்டம் போன்றவற்றின் வாயிலாக, அதிக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கிராமங்களில் உள்ளவர்களின் வருவாய் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கில் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|