கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டதுகடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது ... ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ...
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
04:03

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தின் வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு, அலைக்கற்றை விற்பனை நடைபெற்றுள்ளது.


இதற்கு முன் நடைபெற்ற 4ஜி ஏலத்தை விட இருமடங்கு அதிகமாகவும், 3ஜி ஏலத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவும் இந்த 5ஜி ஏலத்தில் தொகை கோரப்பட்டுள்ளது.இந்த ஏலத்தில், முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் ஜியோ’ அதிக தொகைக்கு ஏலம் கோரி, முதலிடத்தை பிடித்துள்ளது.இதற்கு அடுத்த இடங்களை, ‘பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. மொத்தம் 38 சுற்றுகள் ஏலம் நடைபெற்றன. ஏலத்தில், உத்தர பிரதேசம் கிழக்கு மண்டலத்துக்கான போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த மண்டலத்தில் 10 கோடி மொபைல் சந்தாரார்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால், இந்த இடத்தை பிடிப்பதில் ஏர்டெல் நிறுவனத்துக்கும், ஜியோவுக்கும் கடுமையான போட்டி நிலவியது.புதிய வரவான ‘அதானி’ குழுமம், அதன் தனியார் தொலைதொடர்பு ‘நெட்வொர்க்’ வசதிக்காக, ‘26 மெகா ஹெர்ட்ஸ்’ அலைக்கற்றையை இந்த ஏலத்தில் வாங்கியுள்ளது.


ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு, அவை கோரிய அலைவரிசையை மத்திய அரசு, வரும் செப்.,ல் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜியை விட 5ஜி அலைவரிசை ௧௦ மடங்கு அதிக வேகமாக இருக்கும். 5ஜி இணைப்பால், ஒரு முழு சினிமாவை ஒரு சில விநாடிகளில் பதிவிறக்கலாம்.விரைவில் 5ஜி அறிமுகம் ஆக உள்ளதை அடுத்து, இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)