பிரிட்டனுடன் வணிகம்டி.சி.எஸ்., முதலிடம்பிரிட்டனுடன் வணிகம்டி.சி.எஸ்., முதலிடம் ... நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு ...
கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
03:58

புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை எட்டிஉள்ளது.கடந்த ஜூலை மாதத்தில், குறிப்பிடத்தக்க வகையில் 'ஆர்டர்'கள் அதிகரித்ததை அடுத்து, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.


'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி என பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களின், ஜூலை மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தாண்டு ஜூலை மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான பி.எம்.ஐ., குறியீடு, 56.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஜூன் மாதத்தில் 53.9 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். மே மாதத்தில் இக்குறியீடு, 56.4 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேன்றத்தை உணர்த்தியுள்ளது.


கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து, பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.ஜூலை மாதத்தை பொறுத்தவரை புதிய ஆர்டர்கள் கிடைத்ததன் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. கடந்த நவம்பருக்கு பிறகான வேகமான வளர்ச்சி இதுவாகும்.தயாரிப்பு துறையில் வளர்ச்சி அதிகரித்தபோதும், வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


கிட்டத்தட்ட 98 சதவீத நிறுவனங்களில் ஜூலை மாதத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலையில் குறிப்பிடத்தக்க வகையில் ஆர்டர்கள் அதிகரித்ததை அடுத்து, எட்டு மாதங்களில் இல்லாத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கேற்ப பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)