பதிவு செய்த நாள்
10 மார்2011
12:23
மும்பை: சிமெண்டுக்கான தேவைப்பாடு உள்நாட்டில் அதிகரித்துள்ளதை அடுத்து, சிமெண்ட் நிறுவனங்களின் விற்பனை, சென்ற பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. சென்ற 2010ம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில், சிமெண்ட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை 40 ரூபாய் அதிகரித்து, 225 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் இந்நிறுவனங்கள் மூட்டைக்கு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விலையை உயர்த்தின. ஜனவரி மாதத்தில், நாட்டில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியதை தொடர்ந்து, சிமெண்டுக்கான தேவைப் பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை, 5 சதவீதம் அதிகரித்து, 20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதே மாதத்தில், ஏ.சி.சி. நிறுவனம், 17 லட்சத்து 70 ஆயிரம் டன் சிமெண்ட்டை விற்பனை செய்துள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம், 33 லட்சம் டன் சிமெண்ட்டை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டு பிப்ரவரியில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட 4.2 சதவீதம் அதிகம். டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை, சென்ற பிப்ரவரி மாதத்தில் 20 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. சிமெண்ட் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதே, விற்பனை அதிகரிப்பதற்கு காரணமாகும். உள்நாட்டில், இத்துறையில் ஈடுபட்டுள்ள 50 நிறுவனங்களின் சிமெண்ட் உற்பத்திதிறன், 30 கோடி டன் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|