ஒற்றை இலக்கத்திற்கு வந்தது உணவுப்பணவீக்கம்ஒற்றை இலக்கத்திற்கு வந்தது உணவுப்பணவீக்கம் ... நாட்டின் ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரிப்பு ...
சிமெண்ட் விற்பனை பிப்ரவரியில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2011
12:23

மும்பை: சிமெண்டுக்கான தேவைப்பாடு உள்நாட்டில் அதிகரித்துள்ளதை அடுத்து, சிமெண்ட் நிறுவனங்களின் விற்பனை, சென்ற பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. சென்ற 2010ம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில், சிமெண்ட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை 40 ரூபாய் அதிகரித்து, 225 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் இந்நிறுவனங்கள் மூட்டைக்கு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விலையை உயர்த்தின. ஜனவரி மாதத்தில், நாட்டில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியதை தொடர்ந்து, சிமெண்டுக்கான தேவைப் பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை, 5 சதவீதம் அதிகரித்து, 20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதே மாதத்தில், ஏ.சி.சி. நிறுவனம், 17 லட்சத்து 70 ஆயிரம் டன் சிமெண்ட்டை விற்பனை செய்துள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம், 33 லட்சம் டன் சிமெண்ட்டை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டு பிப்ரவரியில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட 4.2 சதவீதம் அதிகம். டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை, சென்ற பிப்ரவரி மாதத்தில் 20 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. சிமெண்ட் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதே, விற்பனை அதிகரிப்பதற்கு காரணமாகும். உள்நாட்டில், இத்துறையில் ஈடுபட்டுள்ள 50 நிறுவனங்களின் சிமெண்ட் உற்பத்திதிறன், 30 கோடி டன் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)