பதிவு செய்த நாள்
12 மார்2011
04:34
சென்னை : அமெரிக்கன் பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் அமைப்பின் சார்பில் நடைபெறும் '2011 தோகா ஏ.பி.ஐ., கருத்தரங்கு மற்றும் கண்காட்சி' மத்திய கிழக்கு நாடான தோகாவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி, வரும் மே மாதம் 23-25ம் தேதிகளில், ஷெரட்டன் தோகா ரிசார்ட் கன்வென்ஷன் ஓட்டலில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், வினியோகஸ்தர்கள், எண்ணெய் குழாய்கள் பராமரிப்போர் மற்றும் கடல் மார்க்கமாக எண்ணெய் எடுத்து செல்லும் நிறுவனத்தினர் உள்ளிட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர். இக்கண்காட்சியில், நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. இத்துறையில் ஈடுபடும் நிறுவனங்கள், உள்நாட்டில் அதிகளவு வளர்ச்சியை எட்டவும், சர்வதேச தர நிர்ணயம், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மற்றும் உலகளாவிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சி பயனுள்ளதாக அமையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|