பதிவு செய்த நாள்
28 மார்2011
09:09
ரிஷிவந்தியம் : தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் 10 ரூபாய்க்கு மூன்று கிலோ என விற்பனை செய்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டது. இந்நிலையில் தக்காளி விளைச்சல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இங்கு விளையும் தக்காளி மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது அதிகளவில் விளைந்துள்ள தக்காளியை மினி டெம்போவில் எடுத்து சென்று அருகில் உள்ள மாவட்டங்களில் விற்பனை செய்கின்றனர். ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோடு பகுதியில் நேற்று மினிடெம்போவில் கொண்டு வந்து தக்காளி விற்பனை செய்யப்பட்டது. மூன்று கிலோ தக்காளி 10 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்தனர். விலை மலிவாக இருந்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|