பதிவு செய்த நாள்
07 ஏப்2011
00:20
புதுடில்லி: இந்தியாவில், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது. இதன்படி,சென்ற 2010-11ம் நிதியாண்டின், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அன்னிய முதலீடு 2,270 கோடி டாலர் அதிகரித்து (10.44 லட்சம் கோடி ரூபாய்),62 ஆயிரத்து 860 கோடி டாலராக (28 லட்சத்து 91 ஆயிரத்து 560 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது,கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில்,60 ஆயிரத்து 590 கோடி டாலராக (27 லட்Œத்து 87 ஆயிரத்து 140 கோடி ரூபாய்) இருந்தது.இதே காலத்தில் அன்னிய நேரடி முதலீடு, 620 கோடி டாலர் உயர்ந்து (28 ஆயிரத்து 520 கோடி ரூபாய்),19 ஆயிரத்து 800 கோடி டாலராக (9 லட்Œத்து 10ஆயிரத்து 800 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இந்திய நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, பல வகைகளில் நிதியை திரட்டி கொள்கின்றன. குறிப்பாக,வெளிநாடுகளில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், அந்நாடுகளிலிருந்து அதிகளவில் வர்த்தக கடன்களை பெற்று கொள்கின்றன. இவ்வாறு பெற்ற வர்த்தக கடன்கள், சென்ற டிசம்பர் மாதத்தில், 900 கோடி டாலர் (41 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) அதிகரித்து, 25 ஆயிரத்து 890 கோடி டாலராக (11 லட்சத்து 90 ஆயிரத்து 940 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|