பதிவு செய்த நாள்
20 ஏப்2011
09:52
மும்பை : வார வர்த்தகத்தி்ன் மூ்னறாம் நாளான இன்று, பங்குவர்த்தகம் 192 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியிருப்பது பங்குமுதலீ்ட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 192.14 புள்ளிகள் அதிகரித்து (சதவீதத்தின் அடிப்படையில் 1% அதிகரித்து) 19,313.97 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 60.05 புள்ளிகள் அதிகரித்து ( சதவீதத்தின் அடிப்படையில் 1.05% அதிகரித்து) 5,800.80 என்ற அளவில் இருந்தது.நேற்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 30.66 புள்ளிகள் உயர்ந்து 19121.83 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 11.65 புள்ளிகள் உயர்ந்து 5740.75 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்சந்தையைப் போலவே, ஹாங்காங் மற்றும் ஜப்பான் பங்குச்சந்தைகளில் பங்குவர்த்தகம் முறையே 0.94 மற்றும் 0.92 சதவீத உயர்வுடன் துவங்கின
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|