பதிவு செய்த நாள்
22 ஏப்2011
00:15
பெங்களூரு: டி.சி.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும், டாட்டா கன்சல்டன்சி நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முழு நிதியாண்டில், 7,569.99 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கும் முந்தைய நிதியாண்டில், 5,618.51 கோடி ரூபாயாக இருந்தது.இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 23 ஆயிரத்து 45 கோடி ரூபாயிலிருந்து, 29 ஆயிரத்து 275 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 2,623 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, இதற்கும் முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில், 2,370 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் வருவாய் 9,663 கோடி ரூபாயிலிருந்து 10 ஆயிரத்து 157 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|