சரிவுட‌னேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்சரிவுட‌னேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... அடுத்த மூன்று ஆண்டுகளில் மொபைல் விளம்பர வருவாய் ரூ.200கோடியை தாண்டும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மொபைல் விளம்பர வருவாய் ரூ.200கோடியை தாண்டும் ...
இந்தியாவின் வழியை பின்பற்றும் ஆப்ரிக்கா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2011
16:55

புதுடில்லி : நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து மற்ற முன்னணி ‌மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பான், ஸ்பைஸ், மேக்ஸ், ஆலிவ் உள்ளி்ட்ட நிறுவனங்கள, ஆப்ரிக்காவில் செயல்பாடுகளை துவக்க திட்டமி்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்த நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்காவில், தற்போது ஏற்பட்டுள்ள தொழி்ற்வளர்ச்சியின் காரணமாக, அங்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துவங்கியுள்ளது.அங்கு இந்தியச் சந்தையைப்போலவே, அங்கும் தரைவழி தொலைபேசிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மொபைல்போன்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகரித்துள்ளது. ஆண்டிற்கு ஆண்டு மொபைல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில், ஏற்கனவே, சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் வர்த்தகம் மேற்கொண்டு வருவதாகவும், அவர்களுடன் போட்டி‌போட்டு சேவைகளை வழங்கி, முன்னணி இடத்தைப் பிடிக்க தாங்கள் திட்டமி்ட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம், பிரேசிலில் தனது செயல்பாடுகளை துவங்கிய மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்தில், நைஜீரியாவில் சேவையைத் துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நைஜீரியாவில், ஏற்கன்வே செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள ஜென் ‌நிறுவனம், மற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, ஆப்ரிக்காவில் சேவைகளை வழங்க உள்ளது. ஆப்ரிக்க சந்தையில், ஆண்டிற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மொபைல்‌போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு மக்களின் விருப்பத்திற்கேற்ப மற்றும் ரசனைக்குரியதான வகையிலான மொபைல்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்ய இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள், ஆப்ரிக்காவில், தங்கள் செயல்பாடுகளை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் துவக்க இருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)