பதிவு செய்த நாள்
28 ஏப்2011
10:11
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மாம்பழம் விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. இதனையடுத்து மார்க்கெட்டுக்கு மாம்பழங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். மாம்பழத்திற்கு எப்பவுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். பொதுவாக ஏப்ரல்,மே மாதங்களில் மாம்பழத்தின் விளைச்சல் அதிகளவில் இருக்கும். இதனால் ஏப்ரல்,மே மாதம் மாம்பழ சீசன் என்பார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு இம்மாத தொடக்கத்தில் மாம்பழ வரத்து மிக குறைவாக இருந்தது. இதனால் மாம்பழ விற்பனை மிகவும் டல் அடித்தது.மேலும் கிலோ 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு மாம்பழங்களின் வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் உச்சத்தில் இருந்த மாம்பழங்களின் விலை குறையத் துவங்கியுள்ளது. தூத்துக்குடிக்கு சேலம், ஏற்காடு, செங்கோட்டை, தென்காசி, புளியரை மற்றும் கேரளாவில் புனலூர், அஞ்சல் உள்ளிட்ட இடங்களில் இருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் அதிகளவில் மாம்பழங்கள் இறக்குமதி செய்ய வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் மாம்பழங்களின் விலை இன்னும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|