பதிவு செய்த நாள்
04 மே2011
01:50
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து மிகவும் மோசமாக இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டிவிகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதுகுறித்த செய்தி வெளியானதையடுத்து, வங்கி, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து போனது.இந்நிலையில், வங்கிகளுக்கான இடர்பாட்டு தொகை ஒதுக்கீட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவும், வங்கி பங்குகளின் விலையை மேலும் சரிவடைய செய்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 463.33 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,534.69 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,024.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,502.42 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல். நிறுவனம் தவிர, ஏனைய 29 நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. தேசிய பங்கு சந்தையிலும் பங்கு வியாபாரம், மிகவும் மந்தமாக இருந்தது. இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 136.05 புள்ளிகள் குறைந்து, 5,565.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்ச மாக 5,710.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,554.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|