பதிவு செய்த நாள்
04 மே2011
14:23
துபாய் : மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்காவின் முதலாவது மற்றும் ஒரே குறைந்த கட்டண விமான சேவை வழங்கு நிறுவனமான (எல்சிசி) ஏர் அரேபியா, துபாய் மையத்திலிருந்து ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் வரை செயல்படும் “ஏர் அரேபியா எக்ஸ்பிரஸ்” ஷட்டில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு எமிரேட்ஸ்களுக்கு இடையே ஒரு வழித்தடத்திற்கு கட்டணமாக வெறும் ரூ.125 ஐ வசூலிக்கும் 20 பேருந்து சேவைகளை ஏர் அரேபியா வழங்க உள்ளது. தெய்ரா, துபாயிலுள்ள ஃபுளோரா டீலக்ஸ் ஹோட்டல் அப்பாட்மெண்ட் மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே ஏர் அரேபியாவின் இந்த ஷட்டில் சேவை செயல்படும். துபாய் ஷார்ஜா வழித்தடத்தில் காலை 03:00 மணி முதல் மறுநாள் காலை 01:00 மணி வரையிலும் மற்றும் ஷார்ஜா துபாய் வழித்தடத்தில் காலை 06:00 மணி முதல் மறு நாள் காலை 04:00 மணி வரையிலும் ஏறக்குறைய 24 மணி நேரமும் இச்சேவை கிடைக்கப்பெறும். ஆன்லைனில் ஏர் அரேபியா இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தும் பயணிகள் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ரூ.125 ஐ கட்டணமாகச் செலுத்தவேண்டும். மேலும் இரண்டு வழித்தடங்களுக்கும் சேர்த்து ரூ.250ஐயும் கட்டணமாகச் செலுத்தலாம். ஏர் அரேபியா நிறுவனத்தின் வர்த்தக சேவைகள் பிரிவின் தலைவர் யு.மு.நிஸார், “வாடிக்கையாளர்களின் பணத்திற்கு மதிப்பையும் மற்றும் உண்மையான வசதியையும் அளிக்க ஏர் அரேபியா உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளது. ஒரு குறைந்த கட்டண, விரைவான மற்றும் உடனுக்குடனான சேவையை துபாய் மற்றும் ஷார்ஜா இடையே வழங்குவதன் வழியாக, எங்கள் பயணிகள் பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த நாங்கள் உதவுகிறோம்.” என்று கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|