டீசல் விலை விரைவில் உயர்கிறதுடீசல் விலை விரைவில் உயர்கிறது ... பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது ...
துபாய்-ஷார்ஜா இடையே “ஏர் அரேபியா எக்ஸ்பிரஸ்” ஷட்டில் சேவை அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2011
14:23

துபாய் : மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்காவின் முதலாவது மற்றும் ஒரே குறைந்த கட்டண விமான சேவை வழங்கு நிறுவனமான (எல்சிசி) ஏர் அரேபியா, துபாய் மையத்திலிருந்து ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் வரை செயல்படும் “ஏர் அரேபியா எக்ஸ்பிரஸ்” ஷட்டில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு எமிரேட்ஸ்களுக்கு இடையே ஒரு வழித்தடத்திற்கு கட்டணமாக வெறும் ரூ.125 ஐ வசூலிக்கும் 20 பேருந்து சேவைகளை ஏர் அரேபியா வழங்க உள்ளது. தெய்ரா, துபாயிலுள்ள ஃபுளோரா டீலக்ஸ் ஹோட்டல் அப்பாட்மெண்ட் மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே ஏர் அரேபியாவின் இந்த ஷட்டில் சேவை செயல்படும். துபாய் ஷார்ஜா வழித்தடத்தில் காலை 03:00 மணி முதல் மறுநாள் காலை 01:00 மணி வரையிலும் மற்றும் ஷார்ஜா துபாய் வழித்தடத்தில் காலை 06:00 மணி முதல் மறு நாள் காலை 04:00 மணி வரையிலும் ஏறக்குறைய 24 மணி நேரமும் இச்சேவை கிடைக்கப்பெறும். ஆன்லைனில் ஏர் அரேபியா இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தும் பயணிகள் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ரூ.125 ஐ கட்டணமாகச் செலுத்தவேண்டும். மேலும் இரண்டு வழித்தடங்களுக்கும் சேர்த்து ரூ.250ஐயும் கட்டணமாகச் செலுத்தலாம். ஏர் அரேபியா நிறுவனத்தின் வர்த்தக சேவைகள் பிரிவின் தலைவர் யு.மு.நிஸார், “வாடிக்கையாளர்களின் பணத்திற்கு மதிப்பையும் மற்றும் உண்மையான வசதியையும் அளிக்க ஏர் அரேபியா உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளது. ஒரு குறைந்த கட்டண, விரைவான மற்றும் உடனுக்குடனான சேவையை துபாய் மற்றும் ஷார்ஜா இடையே வழங்குவதன் வழியாக, எங்கள் பயணிகள் பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த நாங்கள் உதவுகிறோம்.” என்று கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)