பதிவு செய்த நாள்
06 மே2011
16:48
ஹெல்சிங்கி : மேற்கு ஐரோப்பிய நாடுகளில், மொபைல்போன் விற்பனையில் முடிசூடா மன்னனாக விளங்கிய நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ லிமிடெட் முன்னிலை பெற்றுள்ளதாக ஐடிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐடிஎப் நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 1990ம் ஆண்டிலிருந்து மொபைல்போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் நோக்கியா நிறுவனம் முதலிடத்தில் இருந்து வந்ததாகவும், 21 ஆண்டுகள் தொடர்ந்து முன்னணியில் இருந்த நோக்கியா நிறுவனத்திற்கு இது பலத்த பின்னடைவாக கருதப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக, மார்க்கெட் ஷேர் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. சாம்சங் நிலை இவ்வாறிருக்க, நோக்கியா நிறுவனத்தின் விற்பனை 10 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. மார்க்கெட் ஷேர் 28 சதவீத அளவிற்கு சரிந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், 20 சதவீத சரிவை கண்டதன் மூலம் அதிலும் முதலிடம் வகித்த நோக்கியா நிறுவனம், முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் பறிகொடுத்தது இவ்வாறு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|