பதிவு செய்த நாள்
11 மே2011
02:33
சென்னை:பெங்களூரைசேர்ந்த ஆல்டா சின் டாங்சோலார் டெக் நிறுவனம், தொலைத் தொடர்பு கோபுரங் களுக் கான சூரிய மின் சக்தி சாதனங்களை, முதலீடு இல்லாமல் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தி யாவைசேர்ந்த ஆல்டா எனர்ஜி டெக்னாலஜீ”ம், சீனாவின் சின் டாங் நிறுவனமும் இணைந்து, 'ஆல்டா சின் டாங்சோலார் டெக்' என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்நிறுவனம், தொலைத் தொடர்பு கோபுரங்கள் இயங்குவதற்குத் தேவையான, மின்சாரத்தை தடையில்லாமல் அளிக்கக் கூடிய, சூரிய மின்சக்தி சாதனங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல் மனாப் கூறியதாவது:இந்தியாவில் மொத்தம் உள்ள 3 லட்சம் தொலைத் தொடர்புகோபுர மையங்களில், 30 ஆயிரத்திற்கும்மேற்பட்டவை, கிராமப்புறங்களில்நேரடி மின்சக்தி இணைப்பு இல்லாத இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத் தும், டீசலில் 24 மணி நேரமும் இயங்குகின்றன. தொலைத் தொடர்பு வசதிக்காக, ஓராண்டில் 200கோடி லிட்ட ருக்கும்மேலாக டீசல் செலவாகிறது. டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் செலவை பெருமளவு குறைப்பதால், குறிப்பிடத்தக்க அளவிற்கு பணத்தை சேமிக்கலாம். இதை கருத்தில் கொண்டு,சூரிய மின் சக்தியால் இயங்கும் சாதனங்களை உருவாக்கியுள்ளோம். பராமரிப்பு செலவு குறைவான இந்த சாதனங் களை, முதலீடு ஏதுமின்றி நிறுவிக் கொள்ளும் வகையில், சுலபத் தவணைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி யுள்ளோம்.மாதந்தோறும் டீசலுக்காக செலவழிக்கும் தொகையைக் கொண்டே, இந்த சாதனங்களுக்கான கடன் மற்றும் வட்டியை, 4 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தி விடலாம். இவ்வாண்டில், 2,000 சாதனங்களை விற்க திட்டமிட்டுள்ளோம். இதன் வாயிலாக, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக் கும். இவ்வாறு அப்துல்மனாப் தெரிவித்தார்.நிகழ்ச்சியில்பேசிய அல்டா எனர்ஜி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டெக்கீஷி, சீனாவில் சூரிய மின்சக்தியால் இயங்கும் 9,000 தொலைத் தொடர்புகோபுரங்களை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|