பதிவு செய்த நாள்
21 மே2011
00:06
புதுடில்லி: அமோக விளைச்சல் காரணமாக, இந்தியாவின் மக்காச்சோளம் ஏற்றுமதி, 24 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, அமெரிக்க உணவு தானியங்கள் கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.இந்தியாவிலிருந்து அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, மக்காச் சோளம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில், மக்காச் சோளம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் (நவம்பர்- அக்டோபர்), மக்காச்சோளம் ஏற்றுமதி, 24 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இதற்கு முந்தைய (2009-10) ஆண்டின், சந்தை பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 33 சதவீதம் (18 லட்சம் டன்) அதிகம்.நடப்பு சந்தை பருவத்தின் தொடக்கத்தில், இந்திய மக்காச் சோளத்திற்கு அமெரிக்காவில் அதிக விலை கிடைத்ததால், இதன் ஏற்றுமதி அதிகரித்தது. வழக்கமாக, கரீப் பருவ அறுவடைக்குப் பிறகு, அக்டோபர் முதல் டிŒம்பர் வரையில் சந்தையில் புதிய மக்காச்சோளம் வரத்து, அதிகளவில் இருக்கும். அப்@பாது மக்காசோளம் விலை, குறைவாகவே இருக்கும்.சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில், இந்தியாவில், ஒரு டன் மக்காச்சோளம் விலை, 9,237 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அதேசமயம், அமெரிக்காவில் இதன் விலை, டன் ஒன்றுக்கு 10 ஆயிரத்து 164 ரூபாயாக அதிகரித்திருந்தது.வேளாண் அமைச்சகத்தின் மூன்றாவது மறு மதிப்பீட்டின் படி, நடப்பு அக்டோபர் மாதத்துடன் முடிவடையும் சந்தை பருவத்தில், நாட்டின் மக்காச்சோளம் உற்பத்தி, 2.20 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டு சந்தையில், சென்ற 13ம்ஏததி நிலவரப்படி, ஒரு டன் மக்காச்சோளம் 10 ஆயிரத்து 761 ரூபாய்க்கு விற்பனையானது. இது, சென்றாண்டு, இதே காலத்தில் நிலவிய விலையை விட, 16 சதவீதம் அதிகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|