184 புள்ளிகள் எற்றத்தில் முடிந்தது வர்த்தகம்184 புள்ளிகள் எற்றத்தில் முடிந்தது வர்த்தகம் ... அதிக ஆசையால் சீன விவசாயிகள் அவதி அதிக ஆசையால் சீன விவசாயிகள் அவதி ...
அபரிமிதமான உற்பத்தியால் மக்காச்சோளம் ஏற்றுமதி உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2011
00:06

புதுடில்லி: அமோக விளைச்சல் காரணமாக, இந்தியாவின் மக்காச்சோளம் ஏற்றுமதி, 24 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, அமெரிக்க உணவு தானியங்கள் கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.இந்தியாவிலிருந்து அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, மக்காச் சோளம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில், மக்காச் சோளம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் (நவம்பர்- அக்டோபர்), மக்காச்சோளம் ஏற்றுமதி, 24 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இதற்கு முந்தைய (2009-10) ஆண்டின், சந்தை பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 33 சதவீதம் (18 லட்சம் டன்) அதிகம்.நடப்பு சந்தை பருவத்தின் தொடக்கத்தில், இந்திய மக்காச் சோளத்திற்கு அமெரிக்காவில் அதிக விலை கிடைத்ததால், இதன் ஏற்றுமதி அதிகரித்தது. வழக்கமாக, கரீப் பருவ அறுவடைக்குப் பிறகு, அக்டோபர் முதல் டிŒம்பர் வரையில் சந்தையில் புதிய மக்காச்சோளம் வரத்து, அதிகளவில் இருக்கும். அப்@பாது மக்காசோளம் விலை, குறைவாகவே இருக்கும்.சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில், இந்தியாவில், ஒரு டன் மக்காச்சோளம் விலை, 9,237 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அதேசமயம், அமெரிக்காவில் இதன் விலை, டன் ஒன்றுக்கு 10 ஆயிரத்து 164 ரூபாயாக அதிகரித்திருந்தது.வேளாண் அமைச்சகத்தின் மூன்றாவது மறு மதிப்பீட்டின் படி, நடப்பு அக்டோபர் மாதத்துடன் முடிவடையும் சந்தை பருவத்தில், நாட்டின் மக்காச்சோளம் உற்பத்தி, 2.20 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டு சந்தையில், சென்ற 13ம்ஏததி நிலவரப்படி, ஒரு டன் மக்காச்சோளம் 10 ஆயிரத்து 761 ரூபாய்க்கு விற்பனையானது. இது, சென்றாண்டு, இதே காலத்தில் நிலவிய விலையை விட, 16 சதவீதம் அதிகம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)