பதிவு செய்த நாள்
27 மே2011
00:08
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது.சர்வதேச பங்கு சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது . தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட இதர ஆசிய பங்கு சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் சூடு பிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், வங்கி, உலோகம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் மற்றும் பொறியியல் துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு குறைவாக இருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 197.40 புள்ளிகள் உயர்வடைந்து, 18,044.64 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,072.61 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,862.88 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 63.40 புள்ளிகள் அதிகரித்து, 5,412.35 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5, 422.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,356.35 புள்ளிகள் வரையிலும்சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|