பயிரிடும் பரப்பு அதிகரித்து வருவதால்கரும்பு விளைச்சல் 38 கோடி டன்னாக உயரும் பயிரிடும் பரப்பு அதிகரித்து வருவதால்கரும்பு விளைச்சல் 38 கோடி டன்னாக ... ... மில்க் பிஸ்கெட் பிரிவில் களமிறங்குகிறது பார்லே மில்க் பிஸ்கெட் பிரிவில் களமிறங்குகிறது பார்லே ...
'சென்செக்ஸ்' 197 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2011
00:08

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது.சர்வதேச பங்கு சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது . தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட இதர ஆசிய பங்கு சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் சூடு பிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், வங்கி, உலோகம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் மற்றும் பொறியியல் துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு குறைவாக இருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 197.40 புள்ளிகள் உயர்வடைந்து, 18,044.64 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,072.61 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,862.88 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 63.40 புள்ளிகள் அதிகரித்து, 5,412.35 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5, 422.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,356.35 புள்ளிகள் வரையிலும்சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)