பதிவு செய்த நாள்
28 மே2011
12:34
பெங்களூரு : பவர் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்ப சேவைகள் வழங்குவதி்ல் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஏபிபி நிறுவனம், இந்தியாவில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பொருட்டு பெங்களூருவில் புதிய உற்பத்தி யூனிட் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஏபிபி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரூ. 115 கோடி மதிப்பீட்டில் நீலமங்கலா வளாகத்தில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய யூனிட்டில் இருந்து மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர்கள் ( எம்சிபி), ரெசிடியூவல் கரண்ட் சர்க்யூட் பிரேக்கர்கள் (ஆர்சிசிபி) மற்றும் சர்ஜ் புரொடக்சன் டிவைஸ்கள் ( எஸ்பிடி) உள்ளிட்டவைகள் இங்கு தயாரிக்கப்பட உள்ளதாகவும், சர்வதேச அளவில், இவற்றிற்கான தேவைகள் அதிகரித்து வருவதன் விளைவாக, புதிய யூனிட்டில் இவைகளை தயாரிக்க தி்ட்டமிட்டதாகவும், 300 ஊழியர்களை கொண்டு, இந்த யூனிட் விரைவில் துவக்கப்பட உள்ளதாகவும், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள தங்கள் நிறுவனம், இந்திய சந்தையிலும் முன்னணி இடத்தைப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|