பதிவு செய்த நாள்
30 மே2011
09:19
புதுடில்லி : பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ரெனால்ட் நிறுவனம், இந்தியாவில் லக்சுரி வகை கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ரெனால்ட் இந்தியா நிர்வாக இயக்குனர் மார்க் நாசிப் கூறியதாவது, இந்தியாவில் லக்சுரி வகை சேடான் காரான 'புளூயன்சை' அறிமுகப்படுத்தி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வேரியண்ட்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் விலை, ரூ. 12.99 லட்சம் மற்றும் ரூ. 14.40 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிய மக்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், சென்னை உற்பத்தி யூனிட்டில் அசெம்பிளி்ங் செய்யப்பட்ட முதல் ரெனால்ட் கார் என்ற பெருமையை புளூயன்ஸ் கார் பெறுகிறது. 2012ம் ஆண்டிற்குள், மேலும் புதிய 3 கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|