பதிவு செய்த நாள்
04 ஜூன்2011
02:45
சென்னை:சோழ மண்டலம் எம்.எஸ். ஜெனரல் இன்‹ரன்ஸ் கம்பெனி, பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 'சோழா இண்டுவிஜூவல் ஹெல்த்லைன்' மற்றும் 'சோழா டோட்டல் ஹோம் புரடக்ட்' என்ற இரு புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். கோபால ரத்னம் கூறியதாவது:'சோழா இண்டுவிஜூவல் ஹெல்த்லைன்' திட்டத்தின்படி, பல் மற்றும் கண் சிகிச்சை பெற்று வரும் புறநோயாளி களுக்கு காப்பீடு வழங்கப்படும். இந்தியாவில், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, காப்பீடு வழங்கும் முதல் திட்டம் இது. இதில், காப்பீட்டு தாரர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, மூன்று வகையான காப்புறுதி தொகையை தேர்வு செய்யும் வசதி உள்ளது. மேலும், 55 வயதிற்குட் பட்ட வர்கள், மருத்துவ பரிசோதனையின்றி இத்திட்டத்தில் சேரலாம்.'சோழா டோட்டல் ஹோம் புராடக்ட்' எளிமை யான, வசதியான, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் மதிப்பு வாய்ந்த சொத்துக்களை பாதுகாக்கும் முழுமையான காப்பீட்டு திட்டம். இத்திட்டத்தில் சேரும் காப்பீட்டுதாரர்கள், நாள் ஒன்றுக்கு குறைந்த அளவு பிரிமிய தொகை யாக, 10 முதல் 15 ரூபாய் வரை செலுத்தினால் போதுமானது. நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், பிரிமிய வருவாய் வாயிலாக, 1,400 கோடி ரூபாய் இலக்கு ஈட்ட நிர்ணயித்துள்ளது. இவ்வாறு கோபாலரத்னம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|