பதிவு செய்த நாள்
04 ஜூன்2011
13:05
சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனம் சொகுசு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் தற்போது வால்வோ நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த பென்ஸ் நிறுவனமும் இதற்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், சுவீடன் நாட்டை சேர்ந்த, 'ஸ்கானியா' என்ற நிறுவனம் இந்தியாவில் காலடி எடுத்து வருகிறது. சுரங்க பணிகளுக்கு தேவையான பிரமாண்ட டிரக்குகள், சொகுசு பஸ்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்கனவே, கடந்த 2007ம் ஆண்டு முதல், எல் அண்டு டி நிறுவனத்துடன் இணைந்து கனரக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது பெங்களூருவில் பிரமாண்டாமான தொழிற்சாலையை நிறுவி, இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் 2,000 கனரக டிரக்குகள் மற்றும் ஆயிரம் சொகுசு பஸ்களை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|