பதிவு செய்த நாள்
20 ஜூன்2011
08:40
புதுடில்லி : விமானத்தின் முக்கிய பாகங்களான இறக்கைகள் மற்றும் அதன் மேற்புற பாகங்கள் தயாரிப்பு பணிகளுக்காக, இந்திய நிறுவனங்களுடன் சர்வதேச அளவில் முன்னணி விமானங்கள் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, ஏர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய நிறுவனங்களான குவெஸ்ட் குளோபல் இஞ்ஜினியரிங் மற்றும் சிஏடிஈஎஸ் டிஜிடெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. குவெஸ்ட் குளோபல் இஞ்ஜினியரிங் நிறுவனம், விமானத்தின் இறக்கைகள் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த மின்சாரம் பாய்ந்து செல்லும் கம்பிகளை தாங்கி நிற்கும் உலோகத்தாலான கோபுரம் போன்ற கட்டமைப்பு பாகங்களை உற்பத்தி செய்ய உள்ளது. கேட்ஸ் நிறுவனம், பியூசிலேஜ் உள்ளிட்ட பாகங்கள் தயாரிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|