பதிவு செய்த நாள்
23 ஜூன்2011
10:50
துபாய் : இந்தியாவின் முன்னணி தனியார்துறை வங்கியான ஆக்சிஸ் பேங்க், புதிய ரெப்ரசன்டேடிவ் அலுவலகத்தை அபுதாயில் அமைத்துள்ளது. துபாயில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு ரெப்ரசன்டேடிவ் அலுவலகம் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் எம் கே லோகேஷ் இந்த புதிய அலுவலகத்தை துவக்கி வைத்தார். இதற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆக்சிஸ் பேங்க் (இண்டர்நேசனல் பேங்கி்ங் மற்றும் டிரசரி பிரிவு) தலைவர் முகர்ஜி கூறியதாவது, இந்த புதிய அலுவலகத்தின் மூலம், தங்களது வங்கியின் சேவைகள் இப்பகுதியில் உள்ளவர்கள் எளிதில் பெறுவதற்கு வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக புதிய பல சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம் அங்கு வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், இந்தியாவில் உள்ள வங்கி கிளையிலிருந்து பணப்பரிமாற்றம் எளிதில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|