பதிவு செய்த நாள்
05 ஜூலை2011
04:12
சென்னை : வி-சாட் கல்விச் சேவையில் ஈடுபடும் எவரான் எஜூகேஷன் நிறுவனம், 'எஜூப்ரென்யூர்' என்ற புதிய கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.கிஷோர் கூறியதாவது: நாட்டின் கல்வித் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், வர்த்தக தலைவர்களை கல்வி தூதுவர்களாக நியமிப்பதன் மூலம் ஆக்கப்பூர்வமான கல்வி மற்றும் அனுபவ தொழில் அறிவை பெற முடியும். போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி நுழைவிற்கான பயிற்சி, சவால்களை சந்திக்கும் திறன் வளர்த்தல் மற்றும் தீர்க்கமான முடிவெடுக்க வழிகாட்டுதல் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அறிவுசார் பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த அங்கமாக திகழவேண்டும் என்ற அவர்களின் கனவை நனவாக்க எங்கள் நிறுவனத்தின் நிபுணர்கள் உதவுவார்கள். இவ்வாறு கிஷோர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|